Wednesday 28 September 2016

தொடரி தோல்வியா?



என்ன ஆச்சு இப்படத்திற்கு? ஒரு ஆக சிறந்த இரயில் படம் தான் தொடரி. படத்தில் முதல் பாதியும், இரண்டாம் பாதி மிக விறுவிறுப்பான திரைக்கதையை கொண்டுள்ளன, அப்படியிருந்தும் ஏன் சரியான ஓப்பனிங் இல்லை?? தனுஷின் மீதான ஈர்ப்பு குறைகிறதா?

என்னை பொறுத்த வரை இது தனுஷிற்கான  கதை அல்ல, ஒரு புது முகத்திற்கான கதை. தனுஷின் வேலையில்லா பட்டதாரிக்கு பிறகு ஒரு சிறந்த மாஸ் ஹீரோவாக மாறிவிட்டார். இந்நிலையில் இப்படி ஒரு புது முகத்திற்கான கதையை அவர் தெரிந்தெடுத்ததே பாராட்டுதலுக்குரியது. பழைய எந்த படங்களின் சாயலும் இல்லாமல் தனுஷால் மட்டுமே நடிக்க முடியும். அற்புதமான நடிப்பு. அந்த கதா பாத்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை தவிர வேறு எதுவும் தனுஷிடம் இல்லை. இப்படி ஒரு நடிகன் தமிழ் சினிமாவிற்கு நிசசயம் மகுடம்.

ஆனால் விளம்பரம் மிக குறைவாக உள்ளதாக நான் கருதுகிறேன். மாரி  படத்திற்கு செய்யப்பட விளம்பரத்தில் கால் பங்கு கூட இதற்கு செய்ய வில்லை. கதையின் மீதான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் இன்று ரசிகன் தியேட்டருக்கு வர வேண்டுமானால் விளம்பரம் மிக முக்கியம். முதல் நாளே ஒரு திரைப்படம் இணையத்தில் வெளி வரும் இக்காலத்தில் ரசிகன் தியேட்டருக்கு வர வேண்டுமானால் கபாலியின் யுக்தியே சிறந்த யுக்தி. விளம்பரம் விளம்பரம். சில நேரங்களில் சிறந்த படங்களுக்கு அது  கிடைக்காமல் போய் விடுகிறது. அப்படித்தான் தொடரியை பார்க்கிறேன். 

No comments:

Post a Comment