Friday 6 April 2018

போராட்ட களமான தமிழகம்



தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக துவங்கிய போராட்டம், இன்றும் பல கோரிக்கைகளுக்காக நீண்டுக்  கொண்டே போகிறது.

டாஸ்மாக் கடைகளை மூட
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக
காவிரி மேலாண்மை அமைப்பதற்காக

என தொடர்ந்து போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது..

மக்களுக்கு எதிரான இந்த செயல்களில் ஈடுபடுவது யார்???

நம்மை ஆள்வதர்காக நாம் ஏற்படுத்திய அரசாங்கம்

அப்படியானால், தவறு யாரிடத்தில் உள்ளது??

நம்மிடத்தில் என்பதை நாம் ஒப்புக்கொண்டே  ஆக வேண்டும்..  நாம் ஒட்டு போடும் போது அவர்களது கவர்ச்சி அறிவிப்புகளை பார்த்தோமே தவிர, மக்கள் நல திட்டங்கள் என்ன?
பொருளாதார திட்டங்கள் என்ன?
கல்வி வளர்ச்சி திட்டங்கள் என்ன?
தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டங்கள் என்ன?
என்று பார்க்கவில்லை..

இலவசமாக என்ன கிடைக்கிறது என்பதில் காட்டிய கவனத்தை நாம் இதில் காட்டவில்லை என்பது எத்தனை பெரிய உண்மை. அதனால் தான் இப்போது அனுபவிக்கிறோம்.

சுவிஸ் நாட்டில் அந்த அரசாங்கம் ஒவ்வொரு தனி நபருக்கும் மாதம் 1.71 லட்சம் தர முன்வந்தது ஆனால் மக்கள் அதை நிராகரித்தனர். அதனால்தான் அங்கே அரசாங்கம்  மக்கள் வளர்ச்சி திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிகிறது, ஆனால் இங்கே இலவசமாக சில சில்லறை பொருட்களை வாரி இறைத்தால் ஆட்சி கிடைத்துவிடும். பிறகு ஆற அமர கொள்ளையடிக்கலாம்.

இனியாவது திருந்துவோம் வருகிற தேர்தலில், இலவசங்களை பார்க்காமல், ஜாதியை பார்க்காமல், மதத்தை பார்க்காமல், தலைவர்களை பார்க்காமல் தேர்தல் வாக்குறுதிகளின்  தரத்தை பார்த்து வாக்களிப்போம். இல்லையேல் வாழ் நாள் முழுக்க போரடிக்க கொண்டே தான் இருக்க வேண்டும்.